ஜெர்மனியின் பொதுத் தேர்தலில் ஃப்ரிட்ரிக் மெர்சின் தலைமையிலான கண்சர்வேட்டிவ் கட்சி (CDU/CSU) பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி கண்டுள்ளது. இருப்பினும், எதிர்பார்த்த 30% வாக்கு சதவிகிதத்தை அவர்கள் அடைய முடியவில்லை.
“இன்று இரவு கொண்டாடலாம், ஆனால் காலை முதல் நாங்கள் கடினமாக உழைக்க தொடங்குவோம்” என்று உற்சாகமாக கொண்டாடிய ஆதரவாளர்களிடம் மெர்ச் கூறினார். அத்துடன், “என்னைச் சூழ்ந்துள்ள பொறுப்பை நன்கு உணர்ந்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தலின் மற்றொரு முக்கிய வெற்றியாளர் வலதுசாரி கட்சியான ஆல்டர்னடிவ் ஃபார் ஜெர்மனி (AfD) ஆகும். அவர்கள் 20.8% வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் நிற்பதற்கான சாதனை படைத்துள்ளனர்.
AfD-வின் சான்ஸலர் வேட்பாளர் ஆலிஸ் வைடல் (Alice Weidel) தனது ஆதரவாளர்களுடன் வெற்றி ஊர்வலத்தை நடத்தினார். இருப்பினும், எதிர்பார்த்ததை விட குறைவான வாக்குகள் கிடைத்ததால் AfD தலைமையகத்தில் சிறிய ஏமாற்றம் நிலவியது.
திங்கட்கிழமை அதிகாலை வந்த முடிவுகளின்படி, கிழக்கு ஜெர்மனியில் AfD மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது. பொதுத்தொலைக்காட்சியான ZDF செய்தி நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, அந்த பகுதியிலுள்ள AfD-வின் வாக்கு சதவீதம் 34% ஆகும்.
“ஜெர்மனியர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என ஆலிஸ் வைடல் தெரிவித்தார். மேலும், மெர்சின் கூட்டணி முயற்சி தோல்வியடையும் என்றும், “நமக்கு மீண்டும் தேர்தல் வரப்போகிறது – மேலும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை” என்றும் அவர் கூறினார்.
இந்த தேர்தலில் கிழக்குப் பகுதி முழுவதும் AfD நிறம் கொண்டிருக்கும் நிலையில், மற்ற ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகள் CDU நிறமான கருப்பாக மாறியது என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது.