அமெரிக்கா மற்றும் உக்ரைன் இயற்கை வளங்கள் மற்றும் மீளமைப்புத் திட்டம் தொடர்பாக ஒப்பந்த நிபந்தனைகளை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் இருந்த எந்தவொரு ஏற்க முடியாத பிரிவுகளும் நீக்கப்பட்டு, இப்போது உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒப்பந்தம் எவ்வாறு பயனளிக்கும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் இதுவரை ஒப்பந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதா என்பது குறித்து உறுதி செய்யவில்லை. இருப்பினும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி விரைவில் வாஷிங்டனுக்குச் செல்லவுள்ளார்.
“நான் கேட்டபடி அவர் வெள்ளிக்கிழமை வருகிறார். அவருடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது எனக்கு எந்தவிதமான பிரச்சனையாக இல்லை. இது மிகப்பெரிய ஒப்பந்தம்,” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ல் தெரிவித்தள்ளார்.
அமெரிக்கா உக்ரைனின் அரிதான கனிம (Rare Earth Minerals) அணுகலை பெறும் மாற்றாக, உக்ரைனில் மீளமைப்புத் திட்டத்திற்கான அமெரிக்க ஆதரவை உறுதி செய்யும் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அமெரிக்க அரசு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்களைச் சேர்ப்பதைத் தவிர்த்துள்ளது.
கடந்த ஒப்பந்தத்தின் வரைவு, அதில் அமெரிக்கா $500 பில்லியன் மதிப்புள்ள உக்ரைனின் இயற்கை வளங்களை தனது ஆதரவுக்குப் பிறகு பெற வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கோரியது. ஆனால் ஸெலென்ஸ்கி இதை நிராகரித்தார்.
அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிற்கு எந்தவிதமான கடப்பாடு (Obligation) இல்லை; ஆனால் உக்ரைன் அனைத்தையும் வழங்க வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஸெலென்ஸ்கி அதனை ஏற்க முடியாது என உக்ரைன் அதிகாரிககள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரைன் பாதுகாப்பு உறுதிமொழிகள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், ஒப்பந்தத்தின் சில முக்கிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.