சுவிட்சர்லாந்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு எண்ணங்கள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகிறது என்று சுவிஸ் இஸ்லாம் மற்றும் சமூகம் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட முதன்மை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தனிநபர் மட்டுமல்ல, சமூகத்திலே ஆழமாக பதிந்த ஒரு அமைப்புசார் பிரச்சினை என ஆய்வின் இணை ஆய்வாளர் ஹான்ஸ்ஜோர்க் ஷ்மிட் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, வேலை, காவல் துறை மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் இந்த எதிர்மறை மனோபாவம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆய்வில் 2,471 முஸ்லிம்கள் பல்வேறு விவகாரங்களில் பாகுபாடுகளை உணர்ந்துள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரிலும் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகள் தங்களின் பிரச்சினையை கடுமையாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற பயத்தில், எந்த ஒரு உதவியும் தேடுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆலோசனை மற்றும் கண்காணிப்பு மையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூகத்தில் உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்வதை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.