அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த காசா பகுதியில் பாலஸ்தினியர்களை பலவந்தமாக இடம்பெயர்த்தல் எந்த விதத்திலும் ஏற்க முடியாதது என்று ஐ.நா.வும் சுவிட்சர்லாந்து அரசும் தெரிவித்துள்ளன.
மேலும், மேற்கு கரை பகுதியை அல்லது காசா பகுதியிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் எந்த நடவடிக்கையும் அந்தப் பகுதியின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜெனீவாவில் நடந்த மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதானி வோல்கர் துர்க் தெரிவித்தார்
“சட்டவிரோதமான செயல்களை சாதாரணமாக ஏற்கக்கூடிய மனப்பான்மையை எதிர்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
பலவந்தமான இடம்பெயர்வு அனைத்துலக மனிதாபிமான சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என சுவிட்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மேற்கு கரையில் வன்முறை அதிகரிப்பு, கட்டடங்கள் அழிக்கப்படுவது மற்றும் இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களின் போக்கு ஆகியவை நிலைமைக்கு மேலும் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய கைதிகள் மற்றும் நிலைமையற்ற முறையில் சிறைக்கிடக்கும் பாலஸ்தினியர்கள் இருவரும் விடுதலையாக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.