உக்ரைனுக்கு ஆதரவினை வெளியிடும் ஐரோப்பா

Must Read

உக்ரைனுக்கு ஆதரவினை வெளியிடுவதாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்புடனான சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த சம்பவங்களை ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டைன்மெயர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆகியோருக்கிடையில் நடந்த தகராறு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

“உலக மக்கள் முன் பேசுவோரின் மரியாதையை பறிக்கும் போது நட்புறவு முறிவுக்கு உள்ளாகும்,” என ஸ்டைன்மெயர் குறிப்பிட்டார்.

இதேவேளை, “ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும்” என ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அனாலேனா பேர்போக் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு அதிகமாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், கூடுதலாக €3 பில்லியன் உதவி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செலென்ஸ்கியின் அமெரிக்க பயணம் ஒரு “முழுமையான தோல்வி” என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், தெரிவித்துள்ளது.

“உக்ரைன் அமைதியை நிராகரிக்கிறது, போரை தொடர விரும்புகிறது” என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி, லண்டனில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு, அமெரிக்காவில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, , “உலகம் உக்ரைனை மறக்கக்கூடாது என செலென்ஸ்கி எனத் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.