சுவிட்சர்லாந்தின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி (Social Democratic Party) தலைவர்கள், அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்வதை எதிர்க்கிறார்கள்.
கடந்த மாத இறுதியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கலாம் என்று அறிவித்தார்.
இதனால், தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவது பொருத்தமல்ல என்று கட்சியின் இணைத் தலைவர் மெட்டியா மேயர் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்கா, ஐரோப்பாவை பிளவு படுத்த முயல்கிறது” என்று அவர், சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலப் பொருளாதார அலுவலக (Seco) இயக்குநர் ஹெலீன் புட்லிகர் ஆர்டியேடா குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரி அறிவிப்பு சுவிட்சர்லாந்தின் மருந்து தொழில்துறையை பெரிதும் பாதிக்கலாம் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. நாங்கள் ஜனநாயகத்தையும் சட்ட மேலாதிக்கத்தையும் மதிக்கும் ஐரோப்பாவுடன் ஒத்துழைக்கலாமா, இல்லை லாபத்தையே முதன்மைப்படுத்துகிறோம் என்று உலகிற்கு குறியீடு அனுப்ப வேண்டுமா?” சமூக ஜனநாயகக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகிய சமூக ஜனநாயகக் கட்சியின் பதில் தெளிவாக உள்ளது எனவும் ஐரோப்பாவுடன் இணைதல் என்பதே அவர்களின் நிலைபாடாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.