20.7 C
Switzerland
Monday, May 19, 2025

இஸ்ரேல் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக மீண்டும் குற்றச்சாட்டு

Must Read

இஸ்ரேல் காசா பகுதிக்கு செல்லும் அனைத்து உதவிகளையும் தடை செய்வது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என மனித உரிமை வல்லுநர் கெனெத் ரொத் கூறியுள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் முன்னாள் இயக்குநரான ரொத், தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ், ஒரு ஆக்கிரமிப்பு ஆட்சியாக, இஸ்ரேலுக்கு மனிதாபிமான உதவிகளை எளிதாக்க வேண்டிய முழுமையான கடமை உள்ளது என அவர் வலியுறுத்தினார்.

“உதவிகளை முழுவதுமாக நிறுத்தும் இஸ்ரேலின் அண்மைய முடிவு, போர்க்குற்றமான பட்டினி உத்தியை மீண்டும் பயன்படுத்துவதாகும்,” என அவர் கூறினார்.

இதே காரணத்திற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்தார்.

காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 48,388 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளுமாக உள்ளனர்.

ஜனவரி 19 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது, நூற்றுக்கணக்கான உதவி லொறிகள் தினசரி காசாவுக்கு அனுப்பப்பட்டன.

ஆனால், இஸ்ரேல் உதவிகளை தடை செய்யும் செய்தி பரவியதால், ஞாயிற்றுக்கிழமை உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்தது.

பாலஸ்தீன விடுதலை இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாத், இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “போர் நிறுத்த உடன்படிக்கையை சிதைக்கும் செயலாக” குற்றம்சாட்டியுள்ளது.

“நாங்கள் மூன்று கட்டங்களைக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்க உறுதிபூண்டுள்ளோம்,” என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அப்துல் அத்தி, “காசா போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

“அனைத்து தரப்பினரும் ஜனவரியில் ஒப்பந்தமாகியதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,” என அவர் கெய்ரோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். மேலும், “ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேல் மீது அதிகபட்ச அழுத்தம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஹமாஸ், இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தின் கீழ் மீதமுள்ள இஸ்ரேல் சிறைப்பிடித்தவர்களை ஒரே நேரத்தில் விடுவிக்க தயார் என தெரிவித்துள்ளது.

ஆனால், இது பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர்நிறுத்தம், மற்றும் இஸ்ரேல் படைகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் எனக் கூறியுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES