உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை தாக்கும் திறனை கடுமையாக பாதிக்கக்கூடிய வகையில், அமெரிக்கா புலனாய்வு தகவல் பகிர்வை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கிக்கிடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அமெரிக்க இராணுவ உதவி நிறுத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு, எடுக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா உக்ரைனுக்கு முக்கிய புலனாய்வு தகவல்களை வழங்கி வந்தது.
குறிப்பாக, ராணுவ இலக்குகளை தாக்க தேவையான தரவுகளை பகிர்ந்தது. எ
னினும், தற்போது எந்தளவிற்கு இந்த பகிர்வு நிறுத்தப்பட்டுள்ளதெனத் தெளிவாக உறுதிப்படுத்த முடியவில்லை.
, அமெரிக்க ஆதரவின் “இடைநிறுத்தம்” உண்மைதான் என CIA இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் உறுதிப்படுத்தினார்.
“இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம் என்றும், எதிர்காலத்தில் நாம் உக்ரைனுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றுவோம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு, உக்ரைன் பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவுடன் நடக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.