தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய இராணுவ பயிற்சியின் போது, தென் கொரியாவினுடைய போர்விமானங்கள் தவறாக வீசப்பட்ட குண்டுகள் வீடுகள் மீது விழுந்தன.
இதனால் பதினைந்து பேர் காயமடைந்துள்ளனர், அதில் இருவர் மோசமான நிலையில் உள்ளதாக, தென்கொரிய இராணுவத்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 10:07 மணிக்கு, இரண்டு KF-16 போர்விமானங்களில் இருந்து எட்டு MK-82 குண்டுகள் தவறாக வீசப்பட்டன.
இந்த குண்டுகள் தலைநகர் சியோலுக்கு வடகிழக்கில் உள்ள போச்சியான் (Pocheon) நகரில் குடியிருப்புகள் மீது விழுந்தன.
15 பொதுமக்கள் காயம், இதில் 2 பேர் தீவிரமாக பாதிப்பு
2 குடியிருப்புகள், ஒரு தேவாலயத்தின் ஒரு பகுதி, மற்றும் ஒரு லாரி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முயற்சியில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த முழுமையான விசாரணை முடியும்வரை, இராணுவப் பயிற்சிகள் இடைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.