இலங்கையின் முன்னாள் காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்னும் கைது செய்யப்படாமை குறித்து இலங்கையின் காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை காவல்துறை நாடுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது
தென்னிலங்கையில், கடந்த வருடத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட தொடர்பாக தேசபந்து உட்பட்ட சில காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து தேசபந்துவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அவர் கடந்த இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவர், காவல்துறையில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையிலேயே,தற்போது காவல்துறை அவரை கைது செய்வதற்கு பொது மக்களின் ஆதரவை கோரி இருக்கிறது
அவர் கைது செய்யப்பட்டால் முன்னாள் காவல்துறை அதிபர் என்ற அடிப்படையில் அவருக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்பட்டது என்றும் சாதாரண ஒரு சந்தேகம் நபராகவே அவர் நடத்தப்படுவார் என்றும் இலங்கையின் காவல்துறை பேச்சாளர் அறிவித்திருக்கிறார்
இதேவேளை, நீதிமன்ற துப்பாக்கி சுட்டு சம்பந்தமாக தேடப்பட்டு வரும் செவ்வந்தி என்ற பெண்ணும் கடந்த இரண்டு வாரங்களாகியும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.