இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் இடம்பெறும் என்ற நிலையில், தற்போது தேர்தல் ஆணையகம் புதிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வர்த்தமானியின் மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி 2025 பெப்ரவரி முதலாம் திகதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்று ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, 2007 ஆம் ஆண்டு ஜனவரி 31 திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று ஆணையகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் வேட்பு மனுப்பட்டியல் தயாரிக்கப்படும் விதம் குறித்தும் ஆணையகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது
இதன்படி வேட்பாளர்களில் 25 வீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும் என்றும், வேட்பு மனுப் பட்டியலில் 50% பெண் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்றும் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.