கிறிஸ்தவ சிலுவையை தவறாக கையாண்டமை தொடர்பில் கொழும்பு ரோயல் கல்லூரி பகிரங்கமாக மன்னிப்பை கோரியிருக்கிறது.
இது தொடர்பில் கல்லூரியின் பதில் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
அதில் இந்த சம்பவத்தை ரோயல் கல்லூரி ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்
அத்துடன் பல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமது கல்லூரியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்
இதேவேளை, சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று கல்லூரியின் அதிபர் உறுதி அளித்திருக்கிறார்
முன்னதாக இந்த சம்பவம் குறித்து இலங்கையின் திருச்சபையும் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தது
முன்னதாக, ரோயல் கல்லூரியின் வருடாந்த சைக்கிள் பேரணி, நேற்று இடம் பெற்ற போது மாணவர் ஒருவர் கிறிஸ்தவர்களின் சிலுவையை தாங்கி அதனை தவறாக கையாண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது