இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக,மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கொழும்பின் புறநகர் களனி பிரதேச சபைக்கு உட்பட்ட காணியை போலி ஆவணங்கள் தயாரித்து கையகப்படுத்தியதாக கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றிருக்கின்றன.
எனினும் இந்த ஆறு பேரும் யார் யார்? என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை
இந்த மோசடி தொடர்பில் நேற்று பத்தரமுல்லையில் உள்ள தமது வீட்டில் வைத்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்
இந்தநிலையில், அவரிடம் குற்றப்புலனாய்த்துறையின், நிதிக் குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்