7.9 C
Switzerland
Friday, May 23, 2025

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் 

Must Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் போராட்டக முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

படலந்தை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் அதிலுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

படலந்தை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு ஊடகத்துடனான நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

எனவே, அந்த அறிக்கையை சமர்ப்பிப்பது தற்போதைய அரசின் பொறுப்பாகும் என்றும் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

இந்த அரசு, குறிப்பாக, அதிகமான உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) இந்த நடவடிக்கையை எடுப்பதா என்பதைக் கவனிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி உறுப்பினர்கள் படலந்தை முகாமில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அந்த முகாமிற்கு அப்போது ரணில் பொறுப்பாக இருந்தார் எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES