9 C
Switzerland
Wednesday, May 21, 2025

அல் ஜசீராவிற்கு ரணில் அளித்த நேர்காணல்…

Must Read

இலங்கை அரசியலில் கடந்த 76 ஆண்டுகளாக குற்ற செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் மிகவும் மெத்தனப் போக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது.

சிங்கள பௌத்த தேசியவாத அரசியலுக்கு கொள்கைகளும் இனவாத கோட்பாடுகளும் இலங்கை அரசியல் பிரவாகத்தில் புரையோடிக் கிடக்கின்றது என்றால் அது மிகப் படப்போவதில்லை.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி செய்த அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இனவாத போக்குகளையும் சிங்கள தேசிய பேரினவாத கொள்கைகளையும் முதன்மையாகக் கொண்டு ஆட்சியை நடத்தியதனை மறப்பதற்கு இல்லை.

அந்த வகையில் அண்மையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான அல்ஜசீரா ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கி இருந்தார்.

அந்த நேர்காணலில் ஊடகவியலாளர், நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ற பழுத்த அனுபவம் கொண்ட அரசியல்வாதி அளித்த பதில்கள் சற்றே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் போர் குற்றச் செயல்கள் தொடர்பிலும் சட்டம் ஒழுங்கு மீறல்கள் தொடர்பிலும் காணி அபகரிப்பு தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ரணில் விக்ரமசிங்க எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உரிய மரியாதையுடன் பதில் அளிக்கவில்லை என்பது அவரது பதில்களில் இருந்து கண்கூடாக தென்பட்டது.

சில முக்கிய கேள்விகளுக்கு ரணில் விக்கிரமசிங்க மிகவும் மெத்தனப்போக்கில் பதிலளித்திருந்தார் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளை புரிந்து கொண்டாலும் அவற்றை மிகவும் உதாசீனமான போக்கில் தனது பதில்களை வழங்கி இருந்தார்.

சில சந்தர்ப்பங்களில் சில கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பதனை தவிர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் ஆறு தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றிய ரணில் விக்ரமசிங்க நாட்டின் தேசிய இன பிரச்சினை மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான எந்த ஒரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை.

அவர் தனது அரசியல் அறிவாற்றலை பயன்படுத்தி கேள்விகளிலிருந்து தப்புவதற்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதனை தவிர்ப்பதற்கும் முயற்சித்தார்.

சில கேள்விகளை முதலில் மறுத்த போதும் பின்னர் அந்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருந்தார் உதாரணமாக போர்க்காலத்தில் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலில் அவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இரண்டாவதாக அந்த கேள்வி மீண்டும் எழுப்பப்பட்ட போது முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட சில இடங்களில் மருத்துவமனைகள் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலில் சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் விமான படையினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் அவ்வப்போது விசாரணை நடத்தப்பட்டதாகவும் அது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அல்ஜசீரா ஊடகத்துடனான நேர்காணலின் போது…..

ராஜபக்சக்களுக்கு எதிராக ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை?

ரணில்:
பிரதமராக பதவி வகித்த காலத்தில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவை உருவாக்கினேன் இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டனர் தற்பொழுது பொது பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றி வரும் ஆனந்த விஜயபால தலைமையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டது நிவாரணனும் இந்த விசாரணைகளின் போது கோட்டபாய ராஜபக்ஷ யோசித்த ராஜபக்ஷ பெசில் ராஜபக்ஷ போன்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டபோதும் அவர்கள் அந்த வழக்குகள் இருந்து விடுவிக்கப்பட்டனர் நாட்டில் சட்டமா அதிபர் திணைக்கிழமையே வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கின்றது சட்டமா அதிபர் அரசியல் தலையீடு அற்ற ஒரு சுயாதீனமான நபர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவே இது தொடர்பில் எவ்வித தலையீடுகளும் எம்மால் செய்ய முடியாது மஹிந்த ராஜபக்ஷ வின் மீது எழுத குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு இருக்கவில்லை அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை

மஹிந்த குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகின்றீர்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றீர்கள் இதனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?

ரணில்:
அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் இலங்கையில் சமூக நிகழ்வுகளில் நாம் ஒன்றாக பங்கேற்பது வளமையானதாகும் அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நான் பங்கேற்று இருந்தேன் கேக் வெட்டிய போது நான் பாடல் பாடியிருந்தேன் அரசியல் முரண்பாடு வேறு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது வேறு திருமண நிகழ்வுகள் இறுதிிறிகள் அல்லது விசேட நிகழ்வுகளில் இவ்வாறு அரசியல்வாதிகளுடன் ஒன்றாக பங்கேற்க நேரிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

கோட்டபாய ராஜபக்ஷ நாட்டின் நிறைவேற்றி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் விசேட விமானத்தில் அவர் மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார் எனவே அவரை எம்மால் தடுக்க முடியவில்லை பதவி விலகல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார் அது உரிய முறையில் எழுதப்படாத காரணத்தினால் மீண்டும் அந்த கடிதத்தை நாங்கள் அனுப்புமாறு அறிவித்திருந்தோம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்பு கூறலர்களில் இருந்து தப்பிக்க முடியுமா

ரணில்:
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழு என்மீது குற்றம் சாட்டியது. ஆனால் நான் தேசிய பாதுகாப்பை விடவும் தேசிய ஒற்றுமையை முன்னிலைப்படுத்தினேன்.
நான் முஸ்லிம்களுக்கு மிகவும் மென்மையாக இருந்தேன் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும், அமைச்சர்கள் பொறுப்பல்ல எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த செனல்4 ஊடக அறிக்கை நிரூபிக்கப்படவில்லை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது.

உள்நாட்டுப் போரின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதாக நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?
ரணில்:
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கப் போவதில்லை. தயவு செய்து அடுத்த கேள்வி

அந்தக் கலவரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை நீங்களே பதவியில் வைத்திருக்கிறீர்கள்?

ரணில்:

ஜெனரல் ஷவேந்திர சில்வா அந்த நேரத்தில் இருந்தார், அவர் எந்த விசாரணைக்கும் முன்னிலையாகத் தயாராக இருப்பதாக கூறினார். நாங்கள் நடத்திய விசாரணைகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அமெரிக்கர்கள் அவரை கருப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டனர், ஆனால் அது எந்த காரணத்தினால் என்பதை அவர்கள் சொல்ல முடியவில்லை. அவர் ஐநாவில் பணியாற்றியிருந்தார்,
எனக்கு தெரிந்தவரை, தேர்தலின்போது இராணுவத் தலைவர்களை மாற்றாமல் இருப்பது ஒரு நடைமுறை. எனவே, நான் அதை மாற்ற விரும்பவில்லை. ஜெனரல் சில்வா குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்று எனக்கு உறுதியாக இருந்தது.

மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்போது உண்மை மற்றும் ஒற்றுமை குறித்து பேசுவது பொருத்தமானதா?

ரணில்:

நான் சொன்னதுபோல், நாம் விசாரணை நடத்திய போது சில குற்றச்சாட்டுகள் சரியாக இருந்தன, சிலவை அவ்வாறு இருக்கவில்லை.
ஆனால் இனி இதைப் பற்றி நான் மேலும் பதிலளிக்கப் போவதில்லை. நாட்டின் மக்களுக்கு, அல்லது தமிழ் சமூகத்துக்கு, நீதி கிடைப்பதற்காக இன்னும் பல செய்வதற்கான அவசியம் உள்ளது என்று நான் உணர்கிறேன்.

பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றி உங்கள் மீது நேரடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன?

ரணில்:

இல்லை எனக்கும் அந்த சம்பவங்களுக்கும் தொடர்பு கிடையாது. அதற்கான எவ்வித சாட்சியங்களும் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றேன். ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த அறிக்கையே அதிகாரபூர்வமற்றது.

காணாமல் போனவர்கள் மற்றும் கொலைகள் குறித்து உங்களின் நிலைப்பாடு

ரணில்:

நான் உங்களுக்குச் சொல்கிறேன், காணாமல் போனவர்களுக்கு தொடர்புடைய விசாரணைகள் இன்னும் நடைபெறுகிறது, செய்யவேண்டிய நிறைய வேலைகள் உள்ளன. நாம் அனைவரையும் கண்டுபிடிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் உயிருடன் இல்லை.

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டனவா?

ரணில்:

நடத்தப்படவில்லை, மருத்துவமனைகளை தாக்குதல்முள்ளிவாய்க்கல் பகுதியில் நடந்தது, அங்கு மருத்துவமனைகள் இருந்தன. மற்றவை அனைத்தும் விசாரிக்கப்பட்டன. சில நிகழ்வுகளில், விமானப்படை குண்டுவீசியது மற்றும் அதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் பெரிய அளவில் தாக்குதுல் நடந்ததாக சொல்ல முடியாது.
எல்லா மருத்துவமனைகளும் பாதிக்கப்பட கூடாது என்று நாம் கூறினோம், மற்றும் போரின் கடைசி நிலைகளில் என்ன நடந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம். ஆம், அங்கு பிரச்சனைகள் இருந்தன, அதை நான் ஒப்புக்கொள்கிறேன், அவற்றை இல்லை என்று நான் சொல்ல முடியாது.

போர் குற்றங்கள் செய்யப்பட்டன என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ரணில்:

நான் கூறினேன், அந்த நிகழ்வுக்கு நாங்கள் வருந்துகிறோம். போர் குற்றங்கள் நிகழ்ந்தனவா? அவை போர் குற்றங்கள் அல்ல, அவை பயங்கரமான விஷயங்கள். பாருங்கள், எங்கள் எல்லா நாடுகளிலும் கலவரங்கள் ஏற்படுகின்றன, மக்கள் எரிக்கப்படுகிறார்கள்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES