9 C
Switzerland
Wednesday, May 21, 2025

கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்

Must Read

வெளிநாடுகளில் வசித்து வரும் 26,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், புதிய கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று வெளியுறவுத் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இவையனைத்தும் இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த விண்ணப்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டின் காலாவதியான காரணத்தினால் பலர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் இது அவர்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் என்பன கூட்டாக இணைந்து இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை தீர்க்க மாத இறுதிக்குள் கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இருப்பினும், இந்த பிரச்சினையை உருவாக்கிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொது மக்கள் எந்தவிதமான மூன்றாம் தரப்பு முகவர்களின் (Intermediaries) உதவியை நாடாமல், நேரடியாக அதிகாரப்பூர்வ தரப்பினரிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES