லண்டனை நேரடியாக இணைக்கும் புதிய ரயில் திட்டத்துக்கான முயற்சியை சுவிட்சர்லாந்து ஆரம்பித்துள்ளது.
ஜெனீவா மற்றும் சூரிச் நகரங்களில் இருந்து நேரடியாக லண்டன் செல்லும் விரைவு ரயில் சேவை 2030க்குள் செயல்படலாம் என மத்திய ரயில்வே நிறுவனம் (Swiss Federal Railways – SBB) தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு சுவிஸ் ரயில் நிலையங்களில் சில மாற்றங்கள் செய்ய நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் உள்ள சென்ட் பேன்க்ராஸ் (St Pancras) ரயில் நிலையத்துடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக Channel Tunnel நிர்வாக நிறுவனமான Getlink உடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெக்ஸிட் (Brexit) காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு குறைந்துவிட்டதாக பலர் கவலை தெரிவித்தனர்.
Swiss Railways (SBB) நிறுவனம் இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கிறது. இருப்பினும், சுவிஸ் ரயில் நிலையங்கள் அதிகமான பயணிகளை அணுக ஏற்கனவே சவால்களை சந்திக்கின்றன.