7.9 C
Switzerland
Friday, May 23, 2025

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது ஏற்பட்ட விபத்து

Must Read

சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ (IndiGo) ஏர்பஸ் A321 விமானம் சிறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தின் வால் பகுதி தரையிறங்கிய போது (Landing) தரையுடன் மோதியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த விமானம் தற்போதைக்கு பயணங்களிலிருந்து இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான பழுதுபார்ப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகு மீண்டும் சேவையில் ஈடுபடும்” என இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான பாதுகாப்பே எங்கள் முதல் முன்னுரிமையாகும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெயில் ஸ்ட்ரைக் (Tail Strike) என்பது விமானம் தரையிறங்கும்போது அல்லது பறக்கும்போது அதன் பின்னணி பகுதி தரையுடன் மோதும் ஒரு நிகழ்வாகும்.

இது பாதுகாப்பு ரீதியாக ஆபத்தானதாக கருதப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES