9 C
Switzerland
Wednesday, May 21, 2025

அரசாங்கத்துடன் தீவிரவாத குழுக்கள் இணைந்துள்ளதாக குற்றச்சாட்டு

Must Read

அரசாங்கத்துடன் தீவிரவாத குழுக்கள் இணைந்து கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தீவிரவாத குழு இணைந்துள்ளதாக பொது பல சேனா குற்றச்சாட்டு

இஸ்லாமிய தீவிரவாத குழு இணைந்துள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகத்துடனான நேர்காணலில், இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அவர், இது தொடர்பான ஆதாரங்கள் தமக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருந்த இந்த குழுவினரை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த குழுவினர் தேசிய மக்கள் சக்திக்குள் நுழைந்ததற்கான ஆதாரங்களாக சில ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை நேர்காணலின்போது அவர் வெளியிட்டுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES