பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வழங்கிய பிடிவிராந்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, டுடெர்டே மிக கடுமையான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, இதனால் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
எனினும் சட்டவிரோத துப்பாக்கிச் சூடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
“இன்று காலை, இன்டர்போல் மணிலா (INTERPOL Manila) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக டுடெர்டேக்கு எதிரான பிடிவிராந்தினை பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் தகவல் தொடர்பு அலுவலகம் (Presidential Communications Office) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
டுடெர்டே, ஏற்கனவே ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, அங்கு ICC விசாரணையை கடுமையாக விமர்சித்தார்.
அதன் பின்னர், செவ்வாய்கிழமை மணிலா வந்தவுடன் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
“அவரது வருகைக்குப் பிறகு, அரச தரப்பு வழக்குரைஞர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பிடிவிராந்து குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை தாக்கல் செய்தார்,” என அரசாங்க அறிக்கை கூறுகிறது.