9 C
Switzerland
Wednesday, May 21, 2025

டென்மார்க்கில் உருவாகி வரும் உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதை!

Must Read

டென்மார்க்கில் உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டு வருகின்றது.

பல்டிக் கடற்கரையில், டென்மார்க்கின் தெற்கு பகுதியில், மிகப்பெரிய பொறியியல் அதிசயம் உருவாகி வருகிறது.

இந்த மாபெரும் திட்டம் முடிந்தவுடன், ஐரோப்பாவின் பாதைமுறை மற்றும் இரயில்பாதைகள் முற்றிலும் மாற்றம்பெற்று விடும் என தெரிவிக்கப்படுகின்றது.

பெமார்ன்பெல்ட் சுரங்கம் (Fehmarnbelt Tunnel) என்பது பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்க்காதிருந்தாலும், இது பிரிட்டன் மற்றும் பிரான்சை இணைக்கும் Channel Tunnel-க்கு இணையானது எனவும் அதைவிட மிகப்பெரியதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டென்மார்க்கையும் ஜெர்மனியையும் இணைக்கும் இந்த சுரங்கம், இருபுறமும் இரண்டு வழி நெடுஞ்சாலை பாதைகள் மற்றும் இரண்டு மின்சார இரயில்பாதைகளை கொண்டிருக்கும் எனதெரிவிக்கப்படகின்றது.

இது உலகின் மிக நீளமான சாலை மற்றும் இரயில்பாதை கொண்ட சுரங்கப் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்கப் பாதையின் மொத்த நீளம்  மொத்த நீளம் – 18 கிமீ (11.2 மைல்) எனவும்,  7.4 பில்லியன் யூரோ (7.7 பில்லியன் டாலர்) செலவில் உருவாகி வருவதாகவும், இது  கடலுக்கடியில் 40 மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Channel Tunnel போல நிலத்தின் அடியில் வெட்டப்படாமல், Fehmarnbelt சுரங்கம் கடலுக்கடியில் உருவாக்கப்பட்டு வருவதனால் இது பொறியியல் அதிசயமாக விளங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 2029ம் ஆண்டில் முழு கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES