9 C
Switzerland
Wednesday, May 21, 2025

ரஷ்யாவுடன் உடனடி 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் இணக்கம்

Must Read

அமெரிக்காவின் 30 நாட்கள் உடனடி போர் நிறுத்த முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

அமெரிக்க – உக்ரைன் பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவில் நடந்ததையடுத்து, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்க்கோ ருபியோ இந்த முன்மொழிவை ரஷ்யாவிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

இந்த “நல்ல முன்மொழிவை” ரஷ்யாவும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை இணங்கச் செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சவூதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், செலன்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஒவல் அலுவலகத்தில் சந்தித்தபின் இரு நாடுகளுக்கிடையே நடந்த முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உக்ரைனுக்கான மருத்துவ மற்றும் ரகசிய தகவல் பகிர்வு உடனடியாக மீண்டும் தொடங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரு தரப்புகளும் உடனடியாக பேச்சுவார்த்தை குழுக்களை அமைத்து, உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பிற்கான உடன்படிக்கைகளை உருவாக்க பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உக்ரைன் போரை நிறுத்த தயாராக உள்ளது. பேச்சுவார்த்தைக்கு வர தயாராக உள்ளது. ரஷ்யா சம்மதிக்காவிட்டால், அமைதிக்கு தடையாக இருப்பது யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்” என ருபியோ குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் உக்ரைனியர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளோம். அவர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்போது, இந்த முன்மொழிவை ரஷ்யாவிடம் கொண்டு சென்று சமாதானத்தை ஒப்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ரஷ்யா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES