இஸ்ரேல் பலஸ்தீன மக்களை இனச்சுத்திகரிப்பு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பு நிபுணர்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் முக்கிய மகப்பேறு மருத்துவ நிலையத்தை இஸ்ரேல் திட்டமிட்டு தாக்கி அழித்தது என அறிவித்துள்ளது.
இதன்மூலம், கருத்தரித்தல், பாதுகாப்பான பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளை முற்றிலுமாக தடுப்பதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளது.
காசா பகுதியின் இன விருத்தி திறனை அழிப்பதற்காக, மருத்துவ அமைப்புகளை முறையாக அழித்துள்ளது” என ஆய்வுக் குழு தெரிவித்தது.
இஸ்ரேல் காசா மீது மேற்கொண்ட போரில் இனப்படுகொலை
“இந்த நடவடிக்கைகள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தைக் கொடூரமாக ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களின் இன விருத்தி திறனை நிரந்தரமான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது,” என ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் தலைவர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனினும், ஜெனீவாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.