கடந்த 2024 ஆம் ஆண்டில் சுவிஸில் 250 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் மத்திய சாலை அதிகாரசபை (FEDRO) தெரிவித்துள்ளது.
இது 2015 ஆம் ஆண்டின் 253 உயிரிழப்புகளுக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ல் 14 அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ல் கடுமையான காயங்களுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களினால் படுகாயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,792 என தெரிவிக்கப்படுகின்றது.
- 81 பேர் காரில் பயணித்தவர்கள்
- 47 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்
- 16 பேர் மின்சார மிதிவண்டி செலுத்தியவர்கள்
- 20 பேர் சைக்கிள் ஓட்டிகள்
- 48 பேர் நடைபயணிகள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீதி பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து இனி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.