சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் கார் காப்புறுதி கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன.
காப்புறுதி நிறுவனங்கள் இதற்குக் காரணமாக பணவீக்கம், அதிக மதிப்புள்ள உதிரி பாகங்கள், மற்றும் அதிக செலவான பழுது பார்த்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.
சுவிட்சர்லாந்தில் கார்களை பழுதுபார்ப்பது தற்பொழுது செலவு கூடிய நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், 2025 முதல் சுவிட்சர்லாந்தில் கார் வைத்திருக்கும் மக்களுக்கு அதிகமான காப்பீட்டு செலவினம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.