சுவிட்சர்லாந்தின் லோசான் விஞ்ஞானிகள், முதுகுநாளம் காயமடைந்தவர்கள் மீண்டும் நடக்க உதவும் புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
இதற்காக, மருத்துவ ரோபோக்கள் மற்றும் முதுகுநாளத்திற்குள் இம்பிலான்ட் இணைந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“Science Robotics” அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கருவி முதல் ஐந்து நோயாளிகளில் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகுநாளம் காயமடைந்தவர்கள் மீண்டும் சில இயக்கங்களை பெறுவதற்காக, மருத்துவ ரோபோக்கள் மூலம் உடல் உறுப்புகள் இயந்திரமாக இயக்கப்படுகின்றன.
ஆனால், செயலில் தசைகளை பயன்படுத்த முடியாத நிலை காரணமாக இதன் விளைவு குறைவாகவே இருக்கும் என்று லோசானின் மத்தியதொழில்நுட்ப நிறுவனம் (EPFL) தெரிவித்துள்ளது.
இதை தீர்க்க, EPFL, லோசான் பல்கலைக்கழகம் மற்றும் லோசான் மருத்துவமனை ஆகியவற்றின் “Neurorestore” ஆராய்ச்சி மையம் இந்த இந்த புதிய கருவியை உருவாக்கியுள்ளது.
மருத்துவ ரோபோக்களின் இயக்கத்துடன் இணைந்து மின்னழுத்த இயக்கங்களை தசைகளுக்கு அனுப்புகிறது.
இதனால் நோயாளிகள் சிறப்பாக நகர முடிந்ததோடு, அவர்களின் தசைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன, என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.