19.6 C
Switzerland
Monday, May 19, 2025

பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்க தடையில்லை

Must Read

பாடசாலை விழாக்களுக்கு அரசியல்வாதிகள் பங்கேற்பதற்கு தடை எதுவும் கிடையாது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாடசாலை கட்டமைப்பினை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதையே மட்டும் கூறியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் பாடசாலை நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என்பது தொடர்பாக எந்தவொரு சட்டமும் விதிக்கப்படவில்லை எனவும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தமது கூற்றுகளை ஊடகங்கள் தவறாகப் பிரசாரம் செய்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி சில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் பாடசாலை விழாக்களில் கலந்து கொள்வது எவ்வாறு என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

எனினும், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அரசியல்வாதிகளை பாடசாலை விழாக்களுக்கு அழைப்பதை நிறுத்துமாறு கல்வி அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES