ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அதிரடியாக ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் விஜயம் செய்தார்.
அமெரிக்காவின் 30 நாள் போர்நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா பரிசீலித்து வரும் நிலையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
புதின் இராணுவக் கண்காணிப்பு உடையில் முன்னரங்க படைகளுடன் கலந்துரையாடும் கட்சிகள் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது.
“குர்ஸ்க் பகுதிகளை முழுமையாக விடுவிப்பது” ரஷ்யாவின் குறிக்கோளாக இருப்பதாக தெரிவித்தார்.
புதினின் பயணம் ரஷ்யப் படைகளின் மனஉறுதியைப் பெருக்க உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற, உக்ரைன் 30 நாள் போர்நிறுத்தத்திற்குச் இணங்கியுள்ளது.
குர்ஸ்கில் பிடிபட்டுள்ள உக்ரைன் வீரர்களை “தீவிரவாதிகள்” எனக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இப்போது முடிவு புதினின் கையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.