அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயங்கரமான தருணம் உருவாகி பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளாக நேரிட்டது.
அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் தீப்பிடித்ததை அடுத்து, பயணிகள் விமானத்தின் இறக்கை மீது நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் 1006 (Boeing 737-800) கொலராடோ ஸ்பிரிங்ஸில் இருந்து டல்லஸ்-ஃபோர்ட் வோர்த் நோக்கி பயணம் செய்தது.
இந்த விமானத்தில் 172 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் பறக்கும் போது “இயந்திர அதிர்வுகள்” ஏற்பட்டு, விமானிகள் டென்வர் விமான நிலையத்துக்கு அவசரமாக திருப்பியதாக, அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு முகமை (FAA) தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்கியவுடன், அதில் உள்ள ஒரு இயந்திரம் தீப்பற்றியது.
விமானத்தில் ஒலிப்பொறியில் கேட்டவுடன், பயணிகள் விமானத்திலிருந்து அவசரமாய் வெளியேறினர்.
புகை சூழ்ந்த அந்த இக்கட்டான தருணத்தில், பலர் விமானத்தின் இறக்கையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
டென்வர் தீயணைப்பு படையின் கூற்றுப்படி, 12 பயணிகள் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அமெரிக்கன் எயர்லைன்ஸ் மற்றும் டென்வர் விமான நிலையத்தினர் இதை மிக அதிவேகமாகக் கையாண்டனர்.
“எங்கள் குழுவினரின் அதிரடிப் பணியால், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.