7.9 C
Switzerland
Friday, May 23, 2025

காசாவில் எந்தவொரு இடமும் பாதுகாப்பானதல்ல

Must Read

கடந்த 15 மாதங்களாக தொடரும் போரின் விளைவாக இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்த கூடாரங்கள் மற்றும் கட்டிடங்களை இலக்காகக் கொண்டு, இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பின் (UNICEF) பேச்சாளர் தெரிவித்தார்.

தெற்கு காசாவின் ரஃபா (Rafah) நகரின் அல்-மவாசி (Al-Mawasi) பகுதியில், பல குடும்பங்கள் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்திருந்தனர்.

அங்கு இரவு முழுவதும் நிலைமை மிகவும் கடுமையாக இருந்ததாக, UNICEF பேச்சாளர் ரொசாலியா போலென் (Rosalia Bollen) கூறியுள்ளார்.

“காசாவில் மக்கள் அதிகாலை 2 மணியளவில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகளால் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் தடைப்பட்டுள்ளன

காசாவில் ஆயுதக்குழப்பத்துக்கு மத்தியில் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் பெரிதும் தேவைப்படும் நிலையில், இஸ்ரேலின் தடை காரணமாக UNICEF மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக அவசியமான உதவிகளை பெற முடியவில்லை.

“மருத்துவமனைகள் மீண்டும் அதிக அளவிலான காயமடைந்தவர்களால் நிரம்பி விடும். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர், குறிப்பாக குழந்தைகள், மோசமான நிலையில் காயமடைந்துள்ளனர். குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற, உடனடி போர்நிறுத்தம் மிகவும் அவசியம்,” என்று போலென் வலியுறுத்தினார்.

போர் தொடங்கிய 15 மாதங்களாக, காசாவில் உள்ள குழந்தைகள் தொடர்ச்சியான வன்முறையும் ஆழ்ந்த மன அழுத்தத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES