அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “Truth Social” கணக்கில் உக்ரைன் ஜனாதிபதி வொலொதிமிர் செலென்ஸ்கியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் ஒரு மிகச் சிறந்த தொலைபேசி அழைப்பை முடித்துள்ளேன். இந்த உரையாடல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது என தெரிவித்துள்ளார்.
“நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் நடந்த தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, இரு நாடுகளும் (உக்ரைன் & ரஷ்யா) தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகளில் ஒத்துப்போகும் வகையில் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
ராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோரை இந்த உரையாடலில் கலந்துரையாடப்பட்ட முக்கியமான அம்சங்களை தெளிவாக விளக்குமாறு கோரியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், உக்ரைன்-ரஷ்யா போருக்கான அமைதித் தீர்வை முன்மொழிவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.