முன்னாள் காவல் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலின் முன்பாக 2023 டிசம்பர் 31ஆம் தேதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, அதில் தேசபந்து தென்னகோனும் அடங்கும் வகையில், நீதிமன்றம் முந்தைய தீர்ப்பில் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த பிடியாணையை நிறைவேற்றுவதை தடுக்க கோரி தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை நிராகரித்தது.
அதன் பின்னரே, அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.