19.6 C
Switzerland
Monday, May 19, 2025

காசாவில் 3 நாட்களில் 710 பேர் தாக்குதல்களுக்கு இலக்காகி பலி

Must Read

காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 710 பேர் காயமடைந்துள்ளதுடன், 900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் பேச்சாளர் கலீல் அல்-தக்ரான் (Khalil al-Daqran) தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா அரபிக் சேனிக்கு வழங்கிய பேட்டியில், காயமடைந்தவர்களில் 70% குழந்தைகளும் பெண்களுமே என்றும், அவர்களில் பெரும்பாலானோரின் காயங்கள் மிகவும் மோசமானவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

காயமடைந்த பலரை உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்க முடியாததால், அவர்கள் உயிரிழக்க நேர்ந்தது என்றும் அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கடுமையான பற்றாக்குறையால் அவசரகால சிகிச்சை வழங்க முடியவில்லை என்றும் அல்-தக்ரான் தெரிவித்தார்.

இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நடத்தும் தாக்குதலால் மருத்துவமனைகள் செயலிழந்து வருவதால், பலர் மருத்துவ சேவைகளின்றி தவிக்கின்றனர்.

இந்த மனிதாபிமான அவசரநிலைக்கு சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பாலஸ்தீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES