உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போயிங் நிறுவனத்திற்கு எதிராக அதன் முன்னாள் பணியாளர் ஒருவரது குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
பணியாளரது மரணத்திற்கு போயிங் நிறுவனமே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்தின் முன்னாள் தரக் கட்டுப்பாடு மேலாளராக இருந்த ஜான் பார்னெட், தனது ஊழியராக இருந்த போது 737 மற்றும் 787 விமானங்களில் ஏற்பட்ட பிழைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் பல்வேறு வழக்குகளுக்கு ஆளாகி, வழக்கறிஞர்களால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி, 62 வயதான பார்னெட் சார்லஸ்டனில் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், போயிங் நிறுவனம் அவருக்கு எதிராக மனச்சிதைவையும், அடக்குமுறையையும் மேற்கொண்டதாகக் கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
“போயிங் நிறுவனத்தால் பார்னெட் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார். அவரை அவமானப்படுத்தி, அவருடைய நற்பெயரை சேதப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.” சட்டத்தரணிகள் கூறியதாவது,
போயிங் நிறுவனம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், “பார்னெட் அவர்களின் மரணம் மிகவும் துயரமாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
பார்னெட் தனது பணியின்போது விமானங்களின் தரப்பிரச்சனைகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 787 விமானங்களில் ஆக்சிஜன் வழங்கும் அமைப்பில் பிழைகள் காணப்பட்டதாகவும், அவை சீரமைக்கப்படாத நிலையில் விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பார்னெட் தனது மேலாளர்களிடம் இதுபற்றி புகார் அளித்த போதும், அவருக்கு பதிலாக கொடுமைப்படுத்தலையும், வேலை நேரத்தை மாற்றுவதையும், குறைந்த தரமான மதிப்பீடுகளையும் வழங்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
போயிங் நிறுவனம் பார்னெட்டின் தொழில்முறையான வளர்ச்சியை தடுத்து, அவர் வேறு தொழிலுக்குச் செல்ல முடியாத சூழலை உருவாக்கியது. இதனால் அவர் கடுமையான மன அழுத்தத்திற்குள்ளாகி, பின்னர் தற்கொலை செய்து கொண்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட மனதளவிலான பாதிப்பிற்கான இழப்பீடுகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கான வருமான இழப்புகளையும், மருத்துவச் செலவுகளையும், அவரின் உயிர் காப்பீட்டு நன்மைகளை வழங்குமாறு கோரியுள்ளனர்.