சுவிட்சர்லர்நதின் பேசல்-முல்ஹவுஸ் விமான நிலையம் (EuroAirport) தனது பயணிகள் முனையத்தை விரிவாக்க €130 மில்லியன் (CHF124.4 மில்லியன்) முதலீடு செய்ய உள்ளது, என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2030-2031 காலப்பகுதிக்குள் முடிக்கப்படவுள்ளது.
தற்போதைய 15,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள பயணிகள் முனையம் (Terminal) புதுப்பிக்கப்பட்டு, அதே அளவுள்ள (14,000 சதுர மீட்டர்) புதிய கட்டடம் இணைக்கப்பட உள்ளது.
மேலும், விமான நிலைய அணுகல் முறைகளை (Access) மறுசீரமைக்கும் வெளிப்புற மேம்பாடுகளும் சேர்த்துள்ளதால், திட்டத்தின் மொத்த முதலீடு €130 மில்லியனாக இருக்கும் என நிர்வாகம் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
திட்ட வடிவமைப்பு ஒப்பந்தம் பிரெஞ்சு நிறுவனமான drlw மற்றும் பேசல் நிறுவனமான Vischer Architekten குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பேசல்-முல்ஹவுஸ் ஏர்போர்ட் கோவிட்-19 பாண்டமிக் முடிந்த பிறகு பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால், சேவைகளை மேம்படுத்த முயன்றுவருகிறது.
2024-இல் 8.9 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தினர், இது அதன் 75 வருட வரலாற்றில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும்.
விமான நிலைய நிர்வாகம் 2025-ஆம் ஆண்டில் 9.2 மில்லியன் பயணிகளை சென்றடையும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கிறது. இதன் மூலம், சுவிஸர்லாந்தில் ஜூரிக் மற்றும் ஜெனிவா ஏர்போர்டுகளுக்கு அடுத்த முக்கியமான விமான நிலையமாகவும், பிரான்ஸில் ஆறாவது பெரிய விமான நிலையமாகவும் இது திகழ்கிறது.
இந்த விரிவாக்க திட்டம் “Modular Terminal Evolution” (MTE) என அழைக்கப்படுகிறது. இது தனித்தனி பிரிவுகளாக (Modular) அமைக்கப்படும் என்பதால், கட்டுமான பணிகள் மென்மையாகவும், பயணிகள் சேவையில் குறைவான தடை ஏற்படும் வகையிலும் செயல்படுத்தலாம்.
EuroAirport இயக்குநர் மத்தியாஸ் சூர் (Matthias Suhr) “பயணிகள் சேவையை மேம்படுத்துவதே எங்கள் முக்கிய குறிக்கோள்” என குறிப்பிட்டுள்ளார். நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் புதிய கட்டிடம் அழகிய வடிவமைப்புடன் பழைய முனையத்துடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதையும், பயணிகள் வசதிகளை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.