அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வாக்காளர்கள் அமெரிக்க குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவை கையெழுத்திட்டுள்ளார்.
தேர்தல் முறைகேடுகளைச் சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறுகிறார்.
செவ்வாய்கிழமை கையெழுத்திட்ட இந்த உத்தரவின் படி, அமெரிக்க தேர்தல் உதவி ஆணையம் (Election Assistance Commission) தேசிய தேர்தலில் வாக்களிக்க விரும்பும் நபர்கள் அமெரிக்க கடவுச்சீட்டு அல்லது அரசு வழங்கிய சரியான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க மாநிலங்களுக்கு, தேர்தல் நாளுக்குள் வாக்குகளைப் பெற வேண்டும் மற்றும் வாக்களிப்பு முடிந்த பிறகு வரும் அஞ்சல் வாக்குகளை எண்ணக் கூடாது என்று உத்தரவிடுகிறது.
“இந்த உத்தரவு தேர்தல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவரும்” என டிரம்ப் கூறினார்.
“இந்த நாடு தேர்தல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, அதை நாம் சரிசெய்ய வேண்டும்.”
டிரம்ப் கடந்த காலங்களில் அரசியல் தேர்தல் முறைகேடுகள், குறிப்பாக குடியுரிமை இல்லாதவர்களால் நடத்தப்படும் முறைகேடுகள் குறித்துப் பல முறை விமர்சித்து வந்துள்ளார்.
ஆனால், ஆய்வுகளின்படி, அமெரிக்காவில் குடியுரிமை இல்லாதவர்களின் வாக்களிப்பு மிகக் குறைவாகவே நிகழும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக்கன்களின் இந்தக் கொள்கைக்கு ஜனநாயகக் கட்சியும், பல சமூக நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஏனெனில், ஏழை மற்றும் முதியோர்களுக்கு பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பெறுவது கடினமாக இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.