அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அதன் பாகங்களுக்கு 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது, அமெரிக்காவின் வளர்ந்து வரும் வர்த்தக போர் (Trade War) ஒன்றில் புதிய கட்டத்தை அடைகிறது.
“வெளிநாடுகள் எங்கள் பணத்தையும், வேலை வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வரி அமெரிக்க மக்களின் நலனுக்காகத் தேசத்திற்கு திரும்பிக் கொண்டுவரும்,” என டிரம்ப் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி முதல் இந்த புதிய வரிகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி அமெரிக்க தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்,” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்புக்கு உடனடியாக கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற முக்கிய வர்த்தக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது வணிகத்திற்கே தீங்கும், நுகர்வோருக்கு இன்னும் மோசமானதொன்று என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்ஸுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் கனடிய தொழிலாளர்களுக்கு நேரடியான தாக்கமாகும். நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை உலகளாவிய கார் தொழிலில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இந்த வரி அமெரிக்காவின் ஆட்டோமொபைல் சந்தைக்கு புயல் போல் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என Wedbush Securities நிறுவனத்தின் ஆய்வாளர் டேனியல் ஐவ்ஸ் தெரிவித்தார்.
🔻ஜப்பானிய மற்றும் தென் கொரிய கார் நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
மொத்தமாக, உலகளாவிய அளவில் கார் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது.