மியன்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் 7.7 அளவிலான நிலநடுக்கம் மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தால் விமான நிலையங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன.
நாட்டில் உள்ள உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார சரிவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளதாக மியன்மார் இராணுவ அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அருகிலுள்ள தாய்லாந்தில் இந்த நிலநடுக்கம் பல கட்டிடங்களை அதிரவைத்தது. தலைநகர் பாங்காக்கில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் வெள்ளிக்கிழமை மீட்புபணி தீவிரமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நவீன கருவிகள் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் கைகளால் இடிபாடுகளை அகற்ற முயன்று வருகின்றனர்.
பாங்காக்கில் 33 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல். இதில் பலர் மியன்மாரியிலிருந்து வந்த தொழிலாளிகள் என கூறப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) வழங்கிய மதிப்பீட்டின்படி, இந்த நிலநடுக்கத்தால் 10,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ளது.
மியான்மார் எதிர்ப்பு அரசாங்கமான தேசிய ஒற்றுமை அரசு (NUG) அளித்த மதிப்பீட்டின்படி, 2,900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 30 சாலை மற்றும் 7 பாலங்கள் சேதமடைந்துள்ளன.
நய்பிடாவ் மற்றும் மாண்டலே சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த பேரழிவினால், போரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இன்னும் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.