எலோன் மஸ்க் இன்று முதல் முறையாக அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏ வை (CIA) பார்வையிட உள்ளார்.
CIA பணிப்பாளர் ஜான் ராட்க்ளிஃப் அவரை அழைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் மற்றும் தகவலுக்கு அருகிலிருக்கும் ஒரு நபர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், ஹவுஸ் புலனாய்வு குழுவில் உரையாற்றிய ராட்க்ளிஃப், மஸ்கின் “Department of Government Efficiency” (DOGE) CIA மீது எந்தவிதத்திலும் தாக்கம் செலுத்தவில்லை எனக் கூறினார்.
DOGE பிரதிநிதிகள் CIAவுக்கும் National Intelligence இயக்குநர் அலுவலகத்திற்கும் சென்றதில்லை என ராட்க்ளிஃப் மற்றும் தேசிய உளவுத்துறைத் தலைவர் துல்சி காபர்டு தெரிவித்துள்ளனர்.
மஸ்கின் CIA வருகை குறித்து ராட்க்ளிஃப் கடந்த வெள்ளிக்கிழமை CIA ஊழியர்களுடனான சந்திப்பில் அறிவித்தார். “தொழில்நுட்பம் மற்றும் அதன் மூலம் புலனாய்வுத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவது” குறித்துப் பேச விரும்புவதாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், CIA ஊழியர்களிடையே இந்த அறிவிப்புக்கு அதிக உற்சாகம் காணப்படவில்லை. ஒரு தகவல் மூலம், அவர்களின் எதிர்வினை “ஏதோ மீண்டும் ஒரு விஷயம் வரப் போகிறது” எனக் குறிக்கப்பட்டுள்ளது.
மஸ்க் சமீபத்தில் பெண்டகானையும் (அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகம்) பார்வையிட்டுள்ளார். அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் “சிறப்பாக செயல்படும் அரசு அமைப்பு” என்ற முயற்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.