அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறை பதவி வகிப்பதற்கான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசியலில் முக்கியமான 22வது திருத்தச் சட்டம் இரண்டாவது முறைக்கு மேல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க முடியாது என்பதைக் குறிப்பிடுகிறது.
“எனக்கு இது குறித்து பலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், நான் தற்போதைய சூழ்நிலையை குறைவாகவே பார்க்கிறேன். எதற்கும் இன்னும் வழிநடத்தும் நீண்ட வழி உள்ளது,” என்று டிரம்ப் கூறினார்.
1951ஆம் ஆண்டு அமெரிக்க அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட 22வது திருத்தச் சட்டப்படி, ஒருவருக்கு இரண்டு முறைகளை மீறி ஜனாதிபதி பதவி கொடுக்க முடியாது. இதற்கு பதிலளித்த டிரம்ப், “இதற்கான வழிகள் உள்ளன,” என்று கூறினார்.
2028ஆம் ஆண்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) போட்டியிட்டு பின்னர் பதவியை டிரம்புக்கு மாற்றுவதாக கூறப்பட்ட ஒரு திட்டத்தை குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “அது ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், வேறு பல வழிகளும் உள்ளன,” என்று கூறினார்.
முந்தைய காலங்களில் மூன்றாவது தடவை பதவிக்கான சாத்தியத்தை நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்த டிரம்ப், “நான் நகைச்சுவையாக கூறவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
நெவாடா மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், “இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும். ஒருமுறை மட்டுமல்ல, இருமுறை, மூன்றுமுறை, நான்குமுறையாக கூட,” என்று அவர் கூறினார்.
பின்னர், “இல்லை, இரண்டு முறையாகவே இருக்கும். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நான் ஓய்வெடுக்க மாட்டேன்,” என்று விளக்கம் அளித்தார்.
டிரம்பின் நெருங்கிய ஆலோசகரான ஸ்டீவ் பேன்னன் (Steve Bannon), 22வது திருத்தச்சட்டம் தொடர்ச்சியான இரண்டு தவணைகளை மட்டுமே தடை செய்கிறது, அதனால் இது சாத்தியமானது என கூறியுள்ளார். ஆனால், சட்ட நிபுணர்கள் இதை நிராகரிக்கின்றனர்.