இலங்கையின் மன்னார் பகுதியில் அதானி குழுமத்தின் 484 மெகாவாட் காற்றாழர மின் உற்பத்தி திட்டம் தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும், இதனால் ஒரு பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) இழப்பை ஏற்படுத்தும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதானி குழுமம், முந்தைய அரசின் கீழ் US $0.826/KWh என்ற தரிக்கான விலையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மீது முந்தைய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
எனினும், தற்போதைய அரசு, அதானி கூறிய விலை மிக அதிகம் எனக் கண்டறிந்து விமர்சனம் செய்தது.
இதனையடுத்து, அடானி நிறுவனம் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
ஆனால், இலங்கை அரசின் மீண்டும் அழைப்பின் பேரில், அதானி தயாராக உள்ளதாக தெரிவித்தபோதும், தரிக்கப்பட்ட விலையை மாற்றமாட்டோம் என உறுதியளித்தது.
இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அந்த விலையில் திட்டத்தினை அனுமதிக்காது என அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தனது தேர்தல் பிரசாரத்தின்போது, “இந்த விலையில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாது” என வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.