19.6 C
Switzerland
Monday, May 19, 2025

பயணியின் மோசமான செயலினால் அவசரமாக திருப்பப்பட்ட விமானம்

Must Read

இந்தோனேசியாவின் பாலி (Bali) நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne), நகருக்கு புறப்பட்ட ஜெட்‌ஸ்டார் (Jetstar) விமானம், ஒரு பயணி விமானத்தின் கதவை பலவந்தமாகத் திறக்க முயன்றதால் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு, பயணிகள் 200-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற JQ36 என்ற குறைந்த கட்டண அறவீட்டு விமானம் இந்தியப் பெருங்கடலின் மீது பறந்துக்கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் கதவைத் திறக்க முயன்றுள்ளார் என ஜெட்‌ஸ்டார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் விமான பணியாளர்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், அவர்களை திட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து  விமானம் பாலி விமான நிலையத்திற்கு திரும்பியது.

விமானத்தின் பின்புறத்தில் இருந்த பெண் ஒருவர் கதவின் கைப்பிடியைத் தூக்க முயன்றுள்ளார்.

அந்நேரம் எச்சரிக்கை ஒலி (Warning Signal) எழுப்பப்பட்டதால், பணியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த விமானி, பயணிகளுக்கு இந்த தகவலை அறிவித்தார்.

விமானம் பாலி விமான நிலையத்துக்கு திரும்பியதும், அந்த பயணி பாதுகாப்பு அதிகாரிகளால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எங்கள் பயணிகளின் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது விமான சேவை நிறவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தவறான செயல்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. எங்கள் விமானங்களில் இவ்வாறான நடத்தைப் பற்றிய ஒழுங்குமுறைகள் மிக கடுமையானவை என தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES