19.6 C
Switzerland
Monday, May 19, 2025

மியான்மாரில் நிலநடுக்கப் பேரழிவு – உணவு, தங்குமிடம், குடிநீர் அவசியம் என மீட்புக் குழுக்கள் எச்சரிக்கை

Must Read

மியான்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தால், 2,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய தொடங்கியபோது, நிலநடுக்கத்திலிருந்து உயர்ந்தவர்கள் கடுமையான சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரியவந்தது.

மக்கள் தற்போது அதிர்ச்சியிலிருக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை,” என International Rescue Committee (IRC) குழு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள், தொடர்ந்து அதிர்வுகளுக்கு (aftershocks) பயந்து வீடுகளுக்குள் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரங்களில் பாதுகாப்பான இடங்கள் இல்லை. வீடுகள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், மக்கள் அவற்றுக்குள் உறங்க தயங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

“தற்காலிக கூடாரங்கள் (tents) மிகவும் அவசியம்,” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவ உதவியும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியான்மாரில் 2021ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிப் பிடிப்பிற்குப் பிறகு, உள்நாட்டுப் போர் நிலவுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கொண்டு செல்ல முடியாமல் உள்ளது,” என மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம், கடந்த நூற்றாண்டில் மியான்மாரை தாக்கிய மிகப்பெரிய பேரழிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES