இந்த ஆண்டு வீட்டுவாடகைகள் மேலும் உயரக்கூடும் என சுவிட்சர்லாந்து யூ.எஸ்.பி வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர்கள் சராசரியாக 2.5% அதிகமான வாடகை செலுத்த நேரிடும், தற்போதைய வீடுகளின் வாடகை 1.5% அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் வயது மூப்பாகச் செல்லும் போது குடியேறும் எண்ணிக்கை குறைகிறது எனவும் பலர் ஏற்கனவே வசிக்கிற இடத்திலேயே நீண்ட காலம் தங்க விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலியிடங்கள் குறைவாகவும், சந்தையில் புதிய வீடுகள் குறைவாகவும் இருப்பதால், மக்கள் புதிய வீடுகளுக்கு மாறுவதற்கு தயங்குகிறார்கள்.
இந்த நிலைமை குறித்து சுவிஸ் கட்டுமான சங்கமும் (SBV) தகவல் வெளியிட்டுள்ளது.
சுவிஸ் முழுவதும் வீட்டுகாலி வீதம் 1%க்கு குறைவதற்கான அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேவைக்கேற்ப புதிய வீடுகள் போதுமான அளவில் கட்டப்படவில்லை, இதுவே வீட்டு வாடகை உயர்வுக்கான முக்கிய காரணமாகும்.
இவ்வாறான சூழ்நிலையில், புதிய வீடுகளின் கட்டுமானம் அதிகரிக்கப்படவேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.