9 C
Switzerland
Wednesday, May 21, 2025

டிரம்பின் வரி போரால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாரிய இழப்பு

Must Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்த புதிய வர்த்தக வரிகள் (Tariffs) உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவால் அமெரிக்க பங்கு சந்தையில் ஒரே நாளில் $2.5 டிரில்லியன் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

S&P பங்குச் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வங்கிகள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முடிவு தவறாக இருக்கும்” என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது வரிக் கொள்கை அல்ல, உளுந்தம்பருப்பு, ஆரஞ்சு, ஒரு சிறிய முந்திரி இவை அனைத்தையும் 10-ல் பெருக்கி 4-ஆல் வகுத்து எடுத்த முடிவு போல உள்ளது என முதலீட்டாளர் பீட்டர் டக்‌மான் கருத்து வெளியிட்டுள்ளார்.

Chrysler, Dodge போன்ற நிறுவனங்கள் மெக்ஸிகோ, கனடாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

900-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது ஒரு மாற்றத்திற்கான முதல் கட்ட நடவடிக்கை என  டிரம்ப் தரப்பு கூறுகிறது.

விலை உயர்வு தற்காலிகமானது மட்டுமே என அமெரிக்க அரசாங்கத் தரப்பு தெரிவிக்கின்றது.

இந்த வரிகள் அமெரிக்க தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை பாதுகாக்கும்” – டிரம்ப் வாதமொன்றை முன்வைக்கின்றார்.

ஆனால், நிபுணர்கள் “அமெரிக்கர்களுக்கு பொருட்கள் இன்னும் அதிக விலைக்கு கிடைக்கும், இது நிலையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும்” என எச்சரிக்கின்றனர்.

நிதி நெருக்கடி தொடர்ந்து தீவிரமாகினால், டிரம்பின் ஆதரவாளர்களும் தங்கள் கருத்தை மாற்றக்கூடும்” என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உலக பொருளாதாரத்திற்கும், அமெரிக்க நுகர்வோருக்கும் இது ஒரு பெரிய சவாலாக மாறுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES