19.6 C
Switzerland
Monday, May 19, 2025

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் பதவியிலிருந்து நீக்கம் 

Must Read

தென்கொரியாவின் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு இராணுவ சட்டம் அறிவித்ததைக் காரணமாகக் கொண்டு அதிபர் யூன் சுக் யோலை பதவியிலிருந்து ஒருமனதாக நீக்கும் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

அதிபர் யூன் சோல் நகரின் தெருக்களில் படைகளை களமிறக்கியதன் மூலம், அவர் தனது அரசியலமைப்புப் பொறுப்பை மீறி செயல்பட்டார்,” என தலைமை நீதிபதி மூன் ஹ்யுங்-பே தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியலமைப்புச் சபைகளின் அதிகாரத்தை அழிக்கச் செயல்பட்டார். இதனூடாக மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதோடு, கொரிய மக்கள் அளித்த நம்பிக்கையையும் துரோகம் செய்தார் என நீதிபதி கூறியுள்ளார்.

அரசு அமைப்புக்கு எதிரான மற்றும் வட கொரிய ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் ஊடுருவியுள்ளனர்” என்று கூறி யூன் சுக் யோல் திடீரென இராணுவ சட்டம் அறிவித்தார்.

ஆனால், பாதுகாப்புப் படைகள் மற்றும் போலீசாருக்கு அவை (National Assembly) செயற்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டதும், எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப் போவதாகவும் மூத்த ராணுவ அதிகாரிகள் சாட்சியளித்துள்ளனர்.

“இத்தகைய சட்டவிரோத, அரசியலமைப்புக்கு எதிரான செயல்கள், அரசியலமைப்பின் கீழ் பொறுப்பாகக் கருதப்பட முடியாது,” என நீதிபதி மூன் கூறினார்.

“இந்தச் செயல்களால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் அரசியலமைப்பை மீட்டெடுப்பது, ஒரு நாட்டு அதிபரை பதவியில் இருந்து நீக்குவதால் ஏற்படும் செலவுகளைவிட மேலானது,” என்றார்.

யூன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 60 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது என்பதுடன் தற்காலிக அதிபராக ஹான் டக்-ஸூ தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES