அமெரிக்காவின் வரி கொள்கைகளுக்கு பதிலளிக்க சீன அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது மற்றும் தொடர்ந்து எடுக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது.
“சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மீது அழுத்தம் பிரயோகிக்க வரிகளை ஆயுதமாக பயன்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
சீன மக்களின் சட்டபூர்வமான அபிவிருத்தி உரிமைகளில் தாக்கம் செலுத்த வேண்டாம்,” என அமைச்சகம் வலியுறுத்தியது.
இந்தக் கருத்துக்கள், அமெரிக்கா சீன தயாரிப்புகளுக்கு மேலதிக 34 சதவீத சுங்கம் விதித்ததற்குப் பின்னர் வந்துள்ளன.
இதற்குப் பதிலாக சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் கூடுதலாக 34% வரி விதித்து, சில அபூர்வ உலோகங்களின் ஏற்றுமதிக்குப் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதனால் 2025 ஆம் ஆண்டில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி 54% ஆக உயர்ந்துள்ளது.