எலித்தொல்லையால் அவதியுறும் பர்மிங்ஹாம் மக்கள்

Must Read

பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகரில் எலிகள், கரப்பான்கள், சிலந்திகள் உள்ளிட்டனவற்றினால் மக்கள் பெரும் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நகரில் சுமார் 17,000 மெட்ரிக் டன் குப்பை தெருக்களில் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மனிதனுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய பூச்சிகளை அகற்றுமாறு கோரி பலர் தொலைபேசி அழைப்பு எடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பர்மிங்க்ஹாமின் குப்பை அகற்றும் ஊழியர்கள் சம்பள விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரத்தின் 1.2 மில்லியன் மக்களில் பலரின் வீடுகளில் வாரங்களாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு பல்வேறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெறுவதாகவும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதில் சிரமங்கள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாம் நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் குப்பைகளை அகற்ற முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.