9 C
Switzerland
Wednesday, May 21, 2025

சுவிஸில் குப்பையில் போடப்பட்ட 1.3 பில்லியன் ஸ்விஸ் ஃப்ராங்க் மதிப்புள்ள கோவிட் தடுப்பூசிகள்

Must Read

சுவிட்சர்லாந்து அரசு 1.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் (அமெரிக்க டொலர் 1.5 பில்லியன்) மதிப்புள்ள கோவிட் COVID-19 தடுப்பூசிகளை பாவிக்காமலேயே அழித்துவிட்டதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் முக்கிய ஊடகங்கள் இந்த தகவல்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லர்நது அரசாங்கம், 2020 முதல் 2023 வரை 2.3 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமாக கோவிட் தொடர்பான மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

570 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள பொருட்கள் உள்ளூரில் பயன்படுத்தப்பட்டன

270 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புள்ள தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மனிதாபிமான உதவியாக அனுப்பப்பட்டன

மீதமுள்ள தடுப்பூசிகள் மற்றும் பொருட்கள் மதிப்பு –1.45 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 90% நேரடியாக காலாவதி ஆன தடுப்பூசிகளை அழித்ததைக் குறிக்கிறது .

ஜனவரி 2024இல் வெளியான மற்றொரு தகவலின்படி, சுவிஸ் அரசு 18.6 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை காலாவதி காரணமாக அழித்துள்ளது.

இது சுவிஸ் அரசின் திட்டமிடல் குறைபாடுகளையும், தடுப்பூசி தேவையின் சரியான கணிப்பின் பிழைகளையும் வெளிப்படுத்துகிறது என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES