நாம் ஒரு வரலாறு காணாத சுதந்திரமான பயண யுகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பினும், அண்மைக் காலத்தில் சில நாடுகள் தங்களது கதவுகளை மூடத் தொடங்கியுள்ளன.
இத்தாலி தற்போது அதன் குடியுரிமை விதிகளை கடுமையாக மாற்றியுள்ளது, இது மூலதன்மையின் அடிப்படையில் குடியுரிமை பெற எண்ணிய பலருக்கான கனவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்பெயின் தனது “கோல்டன் வீசா” திட்டத்தை நிறுத்தியுள்ளது, இது வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்பு உரிமையை வழங்கியது.
மேலும், ஐக்கிய இராச்சியம் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் பயணிகளிடமிருந்து முன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது — இது ஏற்கனவே 48 நாடுகளுக்குப் பொருந்தும் நடைமுறையாகும்.
இதையடுத்து சுற்றுலா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாகின்றன. வெனிஸ் தனது சுற்றுலாப் பயணிகளுக்கான நாள் நுழைவு கட்டணங்களை இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது, எடின்பராவில் ஒரு இரவுக்கான சுற்றுலா வரி அறிமுகமாகியுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் தேவைக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தும் “சர்ஜ் பிரைசிங்” முறையை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானின் கியோட்டோ நகரம் தங்கும் விடுதிகளுக்கான வரிகளை 10 மடங்கு உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலை ஏறுவதற்கும் இப்போது கூடுதல் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றன.
எவரெஸ்ட் மலையை ஏறும் அனுமதி கட்டணம் 35% உயர்ந்துள்ளது. புஜி மலைக்குச் செல்ல இப்போது 27 அமெரிக்க டொலர் கட்டணம் மற்றும் ஒரு சோதனை தேவைப்படுகிறது.
இவற்றுக்கு நடுவே ஒரு சிறிய மகிழ்ச்சி செய்தி:
ஐரோப்பிய ஒன்றியம் 36,000 இளம் பயணிகளுக்காக இலவச சர்வதேச ரயில் பாஸ்களை வழங்கியுள்ளது.
இதற்குத் தேர்வாக, விண்ணப்பதாரர்கள் 18 வயதானவர்களாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது Erasmus+ கல்வித் திட்டத்தில் இணைந்த நாடுகளில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது.